Thursday, February 2, 2012

கவிதை இன்பம்


         கவிதை இன்பம்

கற்கண்டும் மலைத்தேனும் சுவைத்துப் பார்த்தேன்
   கனிச்சாறும் நறும்பாலும் குடித்துப் பார்த்தேன்
சொற்கொண்டே எனையிழுத்துக் கட்டிப் போட்டுச்
  சுவைநல்கும் மனைவியையும் தீண்டிப் பார்த்தேன்
எற்குமனம் இனிக்கவில்லை கம்ப நாடன்
  ஏட்டினிலே நடமாட வைத்த அந்தச்
சொற்கண்டே நான்மயங்கி நின்றேன்; இன்பச்
  சுவையென்றால் அதுதானென் றடித்துச் சொல்வேன்                                                                                                                                                                                                                                                                                  

ஏதேனும் ஒருசொல்லில் நமைம யக்கும்
  இன்பத்தேன் வெள்ளமெனப் பொங்கி வீழும்
ஏதோவோர் மாந்தரினை அவன்வி ளக்கும்
  இணையற்ற கவிதைவீச்சில் பேச்சி ழந்தே
ஏதோவோர் மயக்கத்தில் ஆழ்கின் றோமே
  அதுதானே கவிதையின்பம் அதனை விட்டு
தீதேதோ தரவல்ல இன்பம் நாடித்
  திரியலாமோ? கவியின்பம் தேடு வோமே

குயில்பாட்டின் சொல்லழகும் கவிதை வீச்சும்
  குரங்கினையும் மாட்டினையும் வியந்து போற்றிக்
குயில்சொல்லும் கற்பனையும் குரங்கின் கூனைக்
  கொலுநேர்த்தி எனச்சொல்லும் அழகும் கோடை
வெயில்நடுவே குளிர்மரத்தின் நிழலின் பம்போல்
  விள்ங்கியுள்ளம் வருடிமகிழ் வளிக்கும் அந்த
மயலூட்டும் கவிதையின்பம் தானே வாழ்வில்
  வழித்துணையாய் வ்ருமின்பம் பிறவெல் லாம்வீண்













No comments:

Post a Comment