Friday, November 14, 2014

ரோஜா மலரே!


                ரோஜா மலரே !
                    
                           ரோஜா மலரே மலர்வாயோ—அந்த
           ராஜா இலையெனத் தளர்வாயோ ?

சிரிப்பிலே அவனிதழ் நடமிருக்கும்—தூய
சிந்தனை ரேகையின் தடமிருக்கும்
நெருப்பிலே அவன்நிறம் சிரித்திருக்கும்—அந்த
நேசனே இலையென நினைப்பாயோ ?

கிண்கிணிச் சிரிப்பொலி நெஞ்சிருக்கும்—சின்னக்
குழந்தையைக் கனிவுடன் கொஞ்சிநிற்கும்
வெண்மதி மீன்களை அணைத்திருக்கும்—அந்த
வல்லவன் இலையென மடிவாயோ ?

இமயமும் குமரியும் எதிரொலிக்கும்—அந்த
இன்மகன் சாம்பலில் கதிர்விளைக்கும்
அமைதி என்றிடில் அவனிருக்கும்—அந்த
அன்பனே இலையென அழிவாயோ ?


  ( காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின்போது திரு.ப.சி. அவர்கள் விரும்பி
    வெளியிட்ட பாடல் தொகுதி ஒலிநாடாவில் இடம்பெற்ற என் பாடல் இது.
    இசை;-திரு. வீரமணி  பாடியவர்;--திருமதி. வித்யா ( உளுந்தூர்பேட்டை சண்முகம்

     மகள் எனக் கருதுகிறேன். ) 

No comments:

Post a Comment